கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான பொது அறிவித்தல்

complaint assessment tax notice

நிறுக்கும், அளக்கும் உபகரணங்ளை சரிபார்த்தல் மற்றும் முத்திரை பதித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கமைய எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சகல வியாபார நிறுவனங்களிலும் வர்த்தகர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் சகல நிறுவை, அளவை மற்றும் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களினை 2025 / 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை செய்தல், சரி பார்த்தல் மற்றும் முத்திரை பதிக்கும் செயற்பாடுகள் கீழ்க்குறிப்பிடப்படும் கால அட்டவணைக்கமைய நடைபெறவுள்ளது.

தொ.இல

திகதி

நேரம்

இடம்

1

2025.03.17

மு.ப 9.00 பி.ப 1.00 வரை

நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், கொக்குவில்

2

2025.03.18 2025.03.19

2025.03.20

2025.03.21

 

மு.ப 9.00  பி.ப 1.00 வரை

நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், திருநெல்வேலி

எனவே வர்த்தகர்கள் அனைவரும் மேற்குறித்த தினங்களில் தங்கள் வியாபார நிலையங்களில் உள்ள சகல நிறுவை, அளவை உபகரணங்களினையும் பரிசோதனைக்குட்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்,துணைத்தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக யாழ்ப்பாண தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டம் (262ஆம் அத்தியாயம்) 26ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்

Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் உதயபுரம் கடற்கரை கரையோரத்தில் துப்பரவுப்பணிகள்

Save a Life மற்றும் நல்லூர் பிரதேச சபையுடன் இணைந்து Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் உதயபுரம் கடற்கரை கரையோரத்தில் துப்பரவுப்பணிகள் 2025.02.15ம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

பொது அறிவித்தல் – தரம் பிரிக்கப்பட்ட உக்கக்கூடிய கழிவுகளை கையளித்தல்

solid waste

புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி

தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 2024.11.25ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 01.01.2025ம் திகதியிலிருந்து பெறுகை நடைமுறைகள் புதிய பெறுகை நடைமறை வழிகாட்டி மற்றும் கையேட்டின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் புதிய பெறுகை நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி நல்லூர் பிரதேச சபை உட்பட 08 உள்ளூராட்சி மன்ற சபை உத்தியோகத்தர்களிற்கு ஓய்வுநிலை வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள் எந்திரி.எஸ்.சண்முகாநந்தன் அவர்களால் 22.01.2025, 06.02.2025 மற்றும் 07.02.2025ம் திகதிகளில் சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் Plastic Zero Challenge

Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் Plastic Zero Challenge என்ற தொனிப்பொருளில் Save a Life மற்றும் படையினரின் பங்களிப்புடனும் நல்லூர் பிரதேச சபையுடன் இணைந்து சபை எல்லைக்குட்பட்ட பலாலி வீதி, ஆடியபாதம் வீதி துப்பரவு செய்யப்பட்டது.

2025ம் ஆண்டின் புதுப்பொலிவுடன் 22/2024 பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2025.01.01ம் திகதி ”கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக சபையின் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது.

2025ம் ஆண்டின் புதுப்பொலிவுடன் 22/2024 பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2025.01.01ம் திகதி ”கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka)" தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக சபையின் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது.
"நாட்டு மக்கள் அனைவரினதும் உள்ளங்கள் புதிய எதிர்பார்ப்புகளுடன் நிரம்பியுள்ள வேளையில், நாம் 2025 ஆம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்.
நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு, சமூக, பொருளாதார அபிவிருத்தி, நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.
'க்ளீன் ஸ்ரீ லங்கா' என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.
சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற, ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாகக் கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
அபிமானம் கொண்ட இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் அழகானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், வளமான வாழ்க்கையை அடைவதற்கும், நேர்மையுடனும் ஒரே நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்பதாக சத்தியப் பிரமாணம் செய்கின்றோம்/உறுதிமொழிகின்றோம்."

உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) நிறைவு விழா

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகவங்கியின் நிதியீட்டத்தில் 2019 - 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) நிறைவு விழா 2024.12.27ம் திகதியன்று வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் LDSP திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைகளை பௌதீக ரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் உரிய காலத்தில் பூர்த்திசெய்தமைக்காக எமது சபைக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இக்கௌரவத்தினை பெறுவதற்கு எமது சபை சார்பாக ஒத்துழைப்புக்களை வழங்கி இரவுபகல் பாராது முழு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எமது சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் எமது சபை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

CA Sri Lanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டி

நல்லூர் பிரதேச சபையானது CA Srilanka , APFA ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைக்கான மதிப்பீட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தது . குறித்த போட்டியின் விருது வழங்கும் நிகழ்வு 2024.12.02ஆந் திகதி பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் B கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த விருது வழங்கும் நிகழ்வில் எமது சபைக்கான இணக்கப்பாட்டிற்கான சான்றிதழை (Certificate of Compliance) சபை சார்பில் சபையின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.